04

E   |   සි   |  

 திகதி: 2020-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0008/2020: Tabs for University Students

8/2020

கௌரவ புத்திக பத்திறண,— உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மடிக் கணினிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;

(iii) இதற்கென கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) அவ்வாறாயின், கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(v) அவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(vi) கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட விவரக் குறிப்புக்கள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்வனவுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும் என்பதையும்;

(ii) அவ்வாறாயின், இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க எதிர்பார்க்கும் திகதி யாது என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-24

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks