பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
6/2020
கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரையும் கேட்பதற்கு,—
(அ) (i) சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் வளங்கள் நியாயமான முறையில் பிரிந்து செல்லாமை காரணமாக இலங்கையிலிருந்து வறுமையை இல்லாதொழிப்பது கடினமாக அமைந்துள்ளதென்பதையும்;
(ii) தற்போது நடைமுறையிலுள்ள பாடத்துறைசார் கல்வி முறையின் மூலம் திறன்கள் விருத்தியடையாததன் காரணமாக சமகால சமூகத்திற்குப் பொருத்தமான தொழில்வாண்மையாளர்கள் உருவாகுவதில்லையெனவும்;
(iii) சட்டப் பொறிமுறையிலும் நீதி நிருவாகத்திற்கான நடவடிக்கைகள் துரிதமாகவும் முறையாகவும் இடம்பெறுவதில்லை என்பதையும்;
(iv) மேற்படி அனைத்து விடயங்களும் இளைஞர் சமுதாயத்தின் மீது நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதென்பதையும்;
(v) இளைஞர்கள் சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மேற்படி விரக்தி மனநிலை தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்துகின்ற இளைஞர் சமுதாயத்தை தொழிற்பயிற்சி அல்லது வேறு முறையான வாழ்வாதார வழிகளில் ஆற்றுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்தையும்;
(iii) பாடசாலைக் கல்வியினை தொழிற்சந்தைக்கு ஏற்றவகையில் திருத்துவதற்குப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில் அப்பிரேரணைகள் யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks