04

E   |   සි   |  

 திகதி: 2019-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0407/2019: Demolishing a building in Dhamma Kusala Vidyalaya without approval

407/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைச் கேட்பதற்கு,—

(அ) (i) தென் மாகாண முதலமைச்சர் அறிந்திருந்த நிலையில் அம்பலாங்கொட தம்ம குசல வித்தியாலயத்திலிருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மிக நவீனமான கட்டிடமொன்று சட்டவிரோதமாக உடைத்து அகற்றப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி சம்பவத்தை மூடி மறைப்பதற்காக அச்சந்தர்ப்பத்தில் பதிற் கடமையாற்றிய அதிபர், சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதையும்;

(iii) சேவையிலிருந்து நீக்கப்பட்டமை சம்பந்தமாக பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதெனினும் இற்றைவரை அவ்வாறானதொரு விசாரணை இடம்பெறவில்லையென்பதை அறிவாாரா என்பதையும்;

(iv) அவ்வாறு சேவையிலிருந்து அகற்றப்பட்டமைக்கு எதிராகவும் மீண்டும் சேவையில் அமர்த்துமாறும் கோரி சம்பந்தப்பட்ட அதிபர் தென் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டினை ஆராய்ந்து இவரை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks