பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
401/ '18
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டின் மொத்த வரிகளில் 57% இலங்கை சுங்கத்தினால் அறவிடப்படுகின்றதென்பதையும்;
(ii) இதில் அதிக வரி வீதம் வாகன இறக்குமதி வரியாகும் என்பதையும்;
(iii) வரி செலுத்தாமலிருப்பதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பலவித உபாயங்களை பயன்படுத்துகின்றனர் என்பதையும்;
(iv) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, 2015.02.10 ஆம் திகதிய 1901/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினூடாகவும், இந்நிலைமையைத் தவிர்ப்பதற்கான கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) எவ்வாறாயினும், 2015.09.22 ஆம் திகதிய 1933/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தீய வர்த்தகர்களுக்கு விரும்பியவாறு நடந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) (அ) (iv) இல் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் சுங்க அதிகாரிகளினால் வௌிப்படுத்தப்பட்ட விலை குறைவாகக் குறிப்பிடப்பட்ட 1000 வாகனங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், ரூபா 8000 மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை அறவிடமுடியும் என்பதையும்;
(iii) சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கட்டளையின் பிரகாரம் 2016.09.21 ஆம் திகதி அனைத்து சுங்கப் பரிசோதனைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியமையினால் நாடு பெருந்தொகையான வருமானத்தை இழந்துள்ளது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனில், (ஆ)(iii) இல் குறிப்பிடப்பட்ட கட்டளையை செல்லுபடியற்றதாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-08
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks