04

E   |   සි   |  

 திகதி: 2019-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0351/2019: Complaints to Police regarding attacks on Places of Worship 2012 Jan -2018 April

351/ '18

கௌர முஹம்மது நசீர்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2012 சனவரி தொடக்கம் 2018 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் இனந்தெரியாத ஆட்களின் தாக்குதல்களுக்கு இலக்காகிய மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் மேற்படி சம்பவங்கள் பற்றி பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கிணங்க வெவ்வேறாக யாது;

(ii) மேற்படி ஒவ்வொரு சம்பவத்துடனும் தொடர்புடைய பொலிஸ் முறைப்பாட்டு இலக்கம், திகதி மற்றும் ஏற்புடைய பொலிஸ் ஆளுகைப் பிரதேசத்தை வெவ்வேறாக குறிப்பிடுவாரா;

(iii) மேற்படி முறைப்பாடுகளில் ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ள மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி ஒவ்வொரு முறைப்பாடுகளுக்கிணங்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இலக்கங்கள் மற்றும் நீதிமன்ற ஆளுகைப் பிரதேசங்கள் யாவை என்பதைத் தொிவிப்பாரா?

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks