01

E   |   සි   |  

 திகதி: 2011-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0632/2011: Number of LTTE members under custody

0632/ ’10

 

கெளரவ அனுர திஸாநாயக்க,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      யுத்தத்தின் பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரீ.ஈ.       அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்புடைய குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) அந்த முகாம்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரீ.ஈ. அல்லாத சந்தேக நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி சந்தேக நபர்களின் பெயர்ப் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அப்பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

(v) மேற்படி குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

(vi) மேற்படி வழக்கு விசாரணை நடாத்தப்படும் நீதிமன்றம் எது என்பதையும்

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-06-09

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks