01

E   |   සි   |  

 திகதி: 2018-08-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0610/2018: Rates of Water supply

610/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரிடம் கேட்பதற்கு.—

(அ) (i) வீட்டுப் பாவனைக்கான நீர் அலகொன்றிற்கு தற்போது அறவிடப்படும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

(ii) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் யாவையென்பதையும்;

(iii) அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏதுவாக திருத்தப்பட்டவாறான கட்டணங்கள் யாவையென்பதையும்;

(iv) இறுதியாக நீர் அலகொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்ட திகதி மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அதிகரிக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கடந்த ஆண்டில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் ஈட்டிக்கொள்ளப்பட்ட இலாபம் எவ்வளவென்பதையும்;

(ii) எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை யாதென்பதையும்;

(iv) நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks