04

E   |   සි   |  

 திகதி: 2018-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0573/2018: Frauds at the Wayamba Provincial Transportation Authority

573/ '18

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் பெயர்கள் யாவை;

(ii) அதன் பணிப்பாளர் சபையிலுள்ளோர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் கல்வித் தகைமைகள் யாவை;

(iii) தற்போது அந்த அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள பயணிகள் போக்குவரத்து உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வீதி இலக்கத்துக்கமைய வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) அந்த அதிகாரசபையின் பயணிகள் வாகன போக்குவரத்து உரிமப்பத்திர புத்தகங்கள் நான்கு காணாமல் போயுள்ளதை அவர் அறிவாரா ;

(ii) ஆமெனின், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) தற்போது வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஓர் ஊழல் நிறைந்த நிறுவனமென குற்றம் சாட்டப்பட்டுள்ளதனால் அதனை தற்போதைய நல்லாட்சி அரசின் கொள்கைகளுக்கமைய நிர்வகிக்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks