பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-07-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அரசாங்க நிதி பற்றிய குழுவில், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. பொது மக்களின் நம்பிக்கையை வளர்த்தல், வினைத்திறனான வள ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தல் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாறானதொரு சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு நிதி அமைச்சு எடுத்த முயற்சிகளையும் குழு பாராட்டியது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள நிதி ரீதியான ஒழுங்குவிதிகள், சட்டக் கட்டமைப்புக்களை அடிப்படையாக் கொண்டிருந்தாலும் அவை சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லையெனக் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போதைய அரச நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள், உள்ளக ரீதியில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறலில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் அரச நிதி முகாமைத்துவச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (11) கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம், நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
தற்பொழுது காணப்படும் அரச நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பொது நிதி பற்றிய சட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை இச்சட்டமூலம் கொண்டுள்ளது. இதன் மூலம் பல துறைகளில் பரந்து காணப்படும் ஒழுங்குமுறைகளை ஒருங்கிணைக்க உதவும். இது அனைத்துக்குமான சட்டமாக செயற்படும் அதேவேளை, நிதி மூலோபாயத் திட்டம் மற்றும் நடுத்தர நிதிச் சட்டகத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.
மேலும், இந்தச் சட்டமூலமானது முதன்மை இருப்பை நடுத்தர கால நிதி ஆதாரமாக இலக்கு வைப்பதற்கும், அரசாங்கத்தின் முதன்மைச் செலவு வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஐ விட அதிகரிக்காமல் இருப்பதை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றது.
எனினும், முன்மொழியப்பட்ட 13% முதன்மை செலவின் வரம்பானது, வளர்ச்சி, செயல்திறன் மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் வழிகளில் வரி மற்றும் செலவு செய்வதற்கான அரசாங்கத்தின் திறனைத் தடுக்கின்றது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும், முதன்மைச் செலவினங்களில் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான வரம்பை நிர்ணயித்த ஒரே நாடாக இலங்கையை அது நிலைநிறுத்துகிறது. இதனால், 2040 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடாக மாறுவதற்கு தேவையான 10% வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமற்றது எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை தயாரித்து வெளியிடுதல், உத்தரவாத வரம்பை குறைத்தல் - சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5%க்கு விஞ்சாது இருப்பது, அரச முதலீட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட வேண்டிய திட்டங்கள் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
வரவிருக்கும் நிதியாண்டு மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான நடுத்தர கால நிதிக் கட்டமைப்பு, முதன்மை இருப்பு இலக்கு, முதன்மை செலவின உச்சவரம்பு, நிதிய மொத்த கணிப்புகள் மற்றும் பொருளாதார அனுமானங்கள் குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.
கடந்த 50 வருடங்களில் அரசாங்கத்தின் வருமானம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனுமானங்கள் எவ்வாறு தவறானவை என்றும், இந்த குறிப்பிட்ட சட்டமூலம் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். மேலும், இவ்வாறான சட்டமூலம் கடனை நிலைநிறுத்துவது மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் நோக்கங்கள் பொருளாதார நிலைமாற்றச் சட்டத்துடன் இணங்கும் வகையில் இருக்க வேண்டும்என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ மதுர விதானகே, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

