பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-04-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் நீலக் கொடி கடற்கரைகளை (Blue Flag Beach) ஸ்தாபித்தல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயற்படுமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் இணக்கப்பாடு இன்மை காரணமாக நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
16 வருடங்கள் கால தாமதமான காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீலக் கொடி கடற்கரைகள் அமைப்பது தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட போதே குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, துறைமுக அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், காலி மாநகர சபை, தொல்பொருளியல் திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் காலி துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கான கடனுதவி 2006 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு இத்திட்டத்தினால் எவ்வித நிதிப் பயனும் கிடைக்காத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர் திட்டத்தின் பொருளாதாரப் பயன்கள் அடிப்படையில் இரண்டாவது திட்ட முன்மொழிவுக்கு அமைய மேலதிகமாக இனங்காணப்பட்ட 40 ஹெக்டயர் நிலம் நிரப்பப்பட்டு அதற்கு மரபுரிமை பாதிப்பு அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, தகுந்த முதலீட்டாளருக்கு வழங்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
பகுதியில் 4 கப்பல் விபத்துக்குள்ளாகியிருப்பதக்கவும், தொல்பொருள் தாக்க பகுப்பாய்வு (AIA) மூலம் கப்பல் பாகங்களை மீட்டு காட்சிப்படுத்துவது போன்ற மாற்று முறைளைப் பயன்படுத்த முடியும் என தொல்பொருளியல் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது யுனெஸ்கோ உலக மரபுரிமைப் பகுதி என்பதால் அது தொடர்பிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி உள்ளிட்ட இந்தத் திட்டத்தம் தொடர்பான சட்டரீதியான தடைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டுக்கு நன்மை பயக்கும் இவ்வாறான திட்டங்களை தடைகளை வெற்றிகொண்டு அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. அத்துடன், அனைத்துத் தரப்பினரும் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் களமாக இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவைப் பயன்படுத்துமாறும் குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இத முன்னேற்றம் தொடர்பில் குழுவுக்கு அறிக்கை அளிக்குமாறு துறைமுக அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், ஏப்ரல் 26 திகதிக்குள் சம்பந்தப்பட்ட ஆரம்பகட்ட முன்னேற்றத்தை அறிவிக்குமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் கடல்சார் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை திட்டம் (Blue Flag Beaches) குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் சுற்றுலாத்தலங்களைக் கொண்ட 28 கடற்கரைகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சான்றிதழுக்காக 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் இங்கு புலப்பட்டது. இலங்கைக்குப் பின்னர் இத்திட்டத்தை ஆரம்பித்த இந்தியாவின் 8 கடற்கரைகள் ஏற்கனவே இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், தான் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்னும் செயற்படுத்தப்படாமல் பல வருடங்களாகத் தாமதமாகி வருகின்றது எனவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்
தற்பொழுது உனவட்டுன, பெந்தோட்டை, பாசிக்குடா மற்றும் அறுகம்பே ஆகிய கடற்கரைகள் உத்தியோகபூர்வ சான்றிதழைப் பெறக்கூடிய கடற்கரைகளாக இனங்காணப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கௌரவ மான்னப்பெரும வலியுறுத்தினார்.
அதற்கமைய, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் முயற்சியின் கீழ் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தும் செயலமர்வை ஏற்பாடு செய்யுமாறும் குழு ஆலோசனை வழங்கியது.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

