logo

E   |   සි   |  

2023-01-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்துத் தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தி

  • ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு
  • சபாநாயகரிடம் முறைப்பாடு
  • பராளுமன்றத்தில் விசேட அறிக்கை
  • எதிர்வரும் 17ஆம் திகதி அமைச்சின் செயலாளரை குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கத் தீர்மானம்

 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசேட கூட்டம் அதன் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (ஜன. 05) நடைபெற்றது. இதில் கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

  1. கோப் குழுவின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது மற்றும் குழுவின் வேலைகளில் அதன் உறுப்பினர்களை தீவிரமாக ஈடுபடுத்துவது என்ற எதிர்பார்ப்புடன் நான்கு உபகுழுக்களுக்கு 12 உறுப்பினர்கள் நியமனம்.
  2. 2023ஆம் ஆண்டில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட வேண்டிய மற்றும் தற்பொழுது அழைக்கப்பட்டு பின்தொடர்புகளை மேற்கொள்ள வேண்டிய நிறுவனங்கள் யாவை என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்பட கோப் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு களப்பயணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
  3. கௌரவ பிரதமர் தலைமையில் 2022 டிசம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது” உத்தியோகபூர்வ நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்பாடுகள் மற்றும் கோப் குழுவின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துப் பற்றி கலந்துரையாடல்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் மற்றும் கோப் குழுவின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கோப் குழுவுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் அவர் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்திருந்த போதிலும், அவர் குறிப்பிட்டதைப் போன்று பாராளுமன்றத்தின் நிதி முகாமைத்துவத்தை பலப்படுத்த பாராளுமன்ற முறைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தொடர்பில் நிலையியற் கட்டளைக்கு அமைய தமக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீறப்படவோ அல்லது அவ்வாறு செயற்பட எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் குழுவுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அரசியலமைப்பு மற்றும் எழுதப்பட்ட சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கடமைகளை நடைமுறைப்படுத்தும்போது செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் அரச துறையினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பாராளுமன்றத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக, இவ்விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பின்வரும் முன்மொழிவுகளும் தீர்மானங்களும் குழுவினால் முன்வைக்கப்பட்டன.

  1. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்து பிழையான முன்னுதாரணமாக அமைந்திருப்பதுடன், கோப் குழுவை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருப்பதால் இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது குறித்து கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அவருடைய பணியாட்தொகுதியிடம் குழுவின் கவலையைத் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
  2. இந்தக் கருத்துத் தொடர்பில் கௌரவ சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தல்.
  3. இந்தக் கருத்தின் ஊடாக சட்டவாக்க செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் தலையீடு செய்வது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டு கௌரவ ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தல்.
  4. இதன் நகலை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு அனுப்புதல்.
  5. கடந்த கோப் குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், எதிர்வரும் 17ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தல் மற்றும் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் செயலாளரை மீண்டும் வலியுறுத்தல்.
  6. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் கடந்த கோப் குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்ட விசேட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
  7. அத்துடன் தற்பொழுது நிலவும் பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அழைப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நளின் பண்டார, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத்.சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சாணக்கியன் ராசமாணிக்கம், கௌரவ ராஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே மற்றுமு் கௌரவ (கலாநிதி) சரித ஹேரத் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks