பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-02-25
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஒப்பீட்டளவில் குறைந்த மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 4 மாதங்களில் திட்டமொன்றை தயாரிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தது.
ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.
இந்த பாடசாலைகளில் காணப்படும் நீர் பிரச்சினைகள் உள்ளிட்ட கழிவறை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குழுவில் வெளிப்பட்டது. பாடசாலைகள் தொடர்பில் முறையான ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக வள ஏற்றத்தாழ்வு இருப்பதாக குழு தெரிவித்தது.
மாணவர்கள் தொகை 200 ஐ விட குறைந்த 5,161 பாடசாலைகள் இந்நாட்டில் உள்ளதாகவும், அவ்வாறான பல்வேறு பாடசாலைகளின் தரம் தொடர்பில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அது தொடர்பில் கண்டறியவேண்டும் எனவும், அதற்கான வளவாளர்களை தொண்டர் அடிப்படையில் இணைத்துக்கொள்ளுமாறும் குழு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு அறிவித்தது.
பாடசாலைக் கட்டமைப்பு ஆலோசனைக் கோவை, கல்வி நிருவாக நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் காலத்துக்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கக் கணக்குக் குழு கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் போது பாடசாலைகள் தொடர்பில் பெற்றோரின் மனப்பாங்கு மாற்றமடையும் வகையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.
பாடசாலைகளை திறத்தல், மூடுதல் மற்றும் ஒழுங்குபடுத்தல் என்பன பாடசாலை கட்டமைப்பு ஆலோசனைக் கோவைக்கு அமைய இடம்பெறவேண்டும் என குழு தெரிவித்தது. பிரபலமடையாத பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இடமாற்றம் செய்யும் போது அந்த இடமாற்ற கட்டளைகளை மேற்பார்வை செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
பாடசாலையொன்றின் பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களை ஈர்க்கும் பிரதான காரணியாக உள்ளதால், இந்த பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகளை விருத்தி செய்துகொள்ள தேவையான விசேட வேலைத்திட்டமொன்றின் தேவையையும் குழு சுட்டிக்காட்டியது.
அனைத்து பாடசாலைகளும் கல்வி நிருவாக அறிக்கையொன்றை வைத்திருக்க வேண்டும் எனவும், பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யும் போது அந்த அறிக்கையை அடிப்படையாக கொள்வது பொருத்தமாகும் என குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டு முதல் 2017 வரையான காலத்தில் 93 பாடசாலைகளில் மாணவர்கள் இல்லாமை, நாட்டின் நிலைமை மற்றும் வேறு காரணங்களால் மூடப்பட்டிருந்ததாக அரசாங்க கணக்குக் குழுவில் புலப்பட்டது. 2018 இல் மாத்திரம் மூடப்பட்ட பாடசாலைகளில் எண்ணிக்கை 101 ஆகும்.
ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளில் மாணவர்களின் விருப்பத்துக்கு அமைய இரண்டாம் நிலை தொகுதிப் பாடங்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் இல்லாமை காரணமாக மாணவர்கள் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாக குழுவில் கலந்துரையாடப்பட்டது. அவ்வாறான பாடங்களை கற்பிப்பதற்கு பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் இல்லாமையும் ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகள் எதிர்நோக்கும் மற்றுமொரு பிரச்சினை என குழுவில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தின் போது செயல்படுத்தப்பட்ட 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' செயற்திட்டத்திற்கு 64,930 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் (2016-2020 காலம்) 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 31,234.77 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்தாகவும், அந்த திட்டத்தின் கீழ் சில சந்தர்ப்பங்களில், தேவைகளை சரியான முறையில் இனங்காணாமல் பாடசலைகளுக்கு வள ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குழுவில் கலந்துரையாடப்பட்டது.
புதிய படசலைகளை உருவாக்கும் போது, குறைந்த அளவு 2 ஏக்கர் காணி தேவையாகும், எனினும் அந்தளவு காணி இல்லாத 200 மாணவர்களை விட குறைந்த அளவு கொண்ட 25 பாடசாலைகள் நிக்கவரட்டிய கல்வி வலயத்தில் மாத்திரம் காணப்படுவதாக குழுவில் புலப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வைத்திய கலாநிதி உப்புல் கலப்பத்தி, திஸ்ஸ அத்தநாயக்க, பேராசிரியர் ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
2026-08-21
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

