E   |   සි   |  

2014 ஒக்டோபர் 29 ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுகளுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான மின்வலு சக்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான குருணாகல் ப்ளான்டேஷன் லிமிறெற்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) “சித்தசுவாதீனம் குறைந்த பிள்ளைகளுக்கான பாடசாலையின் நலன்புரிச் சங்கம்  (கூட்டிணைத்தல்) (திருத்தச்)” சட்டமூலம் பற்றிய “ஏ” நிலையியற் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) “பீ. ஹரிசன் சமுதாய அபிவிருத்தி மன்றம்  (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய “பி” நிலையியற் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1755 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2014 ஒக்டோபர் 30ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks