E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 30 ஆம் பிரிவின் கீழ் சுகாதார அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்;

(i) 2012 ஓகத்து மாதம் 08 ஆம் திகதிய 1770/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ii) 2012 நவெம்பர் மாதம் 08 ஆம் திகதிய 1783/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iii) 2013 பெப்புருவரி மாதம் 15 ஆம் திகதிய 1797/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டீ. ரீ. பஸ்குவல் அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 13 முதல் 16 ஆம் இலக்கம் வரையான விடயங்களாகக் காணப்படும்) இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

• மைத்திரிபால சேனாநாயக்க மன்றம் (கூட்டிணைத்தல்)
• ஹேண்ட்ஸ் பொ எடியுகேஷன் மன்றம் (கூட்டிணைத்தல்)
• சமஸ்த லங்கா சாசனாரக்சக மண்டலய (கூட்டிணைத்தல்)
• பெளத்த விகாரைகளை மறுசீரமைத்தல் மன்றம் (கூட்டிணைத்தல்)


அதனையடுத்து, 1600 மணியளவில் பாராளுமன்றம் 2014 பெப்ரவரி 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks