E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ ரிறோன் பெர்னாண்டோ
(ii) மறைந்த கௌரவ அல்பட் த சில்வா
(iii) மறைந்த கௌரவ ஈ.எல்.பீ. ஹூருல்லே



இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 16, 17, 19 மற்றும் 20 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

• அநுராதபுரம் ஸ்ரீ புஷ்பதான அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)
• பஹலகம சிறீ சோமரத்தன நாயக்க தேரர் மன்றம் (கூட்டிணைத்தல்)
• லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சுமித்ரா பீரிஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)
• ஒலகங்கல மஹா சுதர்ஷன பரோபகாரி மன்றம் (கூட்டிணைத்தல்)


இராமகிருஷ்ண சாரதா மிஷன் (இலங்கைக் கிளை) (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு "பி" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1645 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூலை 22 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks