E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு "அங்கவீனர்களுக்கான ஆலோசனை உதவிகளையும் வழங்குவதற்கான திதொரா தியேட்டர் நிறுவகத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் குறைநிரப்பும் தொகை - தலைப்பு 105, நிகழ்ச்சித்திட்டம் 2 (தேசத்தைக் கட்டியெழுப்புதல், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு) சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'அரச, தனியார் துறை ஊழியர்கள், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் பலர் தமது சேவையில் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே.வீ. சமந்த வித்தியாரத்ன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1628 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks