E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது. (i) கௌரவ எம்.எல்.எம். அபுசாலி (ii) கௌரவ சுகத் திசேரா கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்: காடு (திருத்தம்) காட்டுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம் சுரங்கங்கள், கனிப்பொருட்கள் (திருத்தம்) 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம் சபையின் பிரதான அலுவல்கள் குறைநிரப்பும் தொகை - தலைப்பு 119, நிகழ்ச்சித்திட்டம் 2: (ரூபா 2,400,000,000) - மின்வலு, சக்தி அமைச்சு சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மாவை சோ. சேனாதிராசா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks