E   |   සි   |  

2023 மே 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தாதியியல் பீடத்தின் கற்கை நெறிகளை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2319/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா                    
(ii)    கௌரவ சாமர சம்பத் தசனாயக                    
(iii)    கௌரவ ஷான் விஜயலால் த சில்வா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்

கட்டான தொழிற்சாலை விவகாரங்கள் தொடர்பாக தன்னைப் பற்றி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“மூழ்கிய ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ துஷார இந்துனில் அமரசேன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 2009 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மே 11ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks