E   |   සි   |  

2022 ஆகஸ்ட் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் - ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாம் கூட்டத்தொடரின் ஆரம்பம்


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் பாராளுமன்ற அமர்வை கௌரவ சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமை தாங்கி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல் பற்றிய கௌரவ சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனத்தை வாசித்தார்.

கௌரவ சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.


அதனையடுத்து, 1114 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks