E   |   සි   |  

2022 ஜூலை 16ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

“கௌரவ உறுப்பினர்களே, அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அரசியலமைப்பின் 38(1)(ஆ) உறுப்புரையின் பிரகாரம்,  2022 யூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருமாறு சனாதிபதிப் பதவியினை இராஜினாமாச் செய்திருப்பதனால், அது பற்றிய அறிவித்தல்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் இப்போது சபையில் சமர்ப்பிக்கப்படும்”

(i) 2022, ஜூலை 16 ஆந் திகதி சனிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
(ii) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமாக் கடிதம்
(iii) வேட்புமனு தாக்கல் 2022 ஜூலை 19 ஆம் திகதியன்று


அதனையடுத்து, 1013 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks