E   |   සි   |  

2022 ஜூன் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : கௌரவ பெசில் ரோஹண ராஜபக்ஷ, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 யூன் 08 ஆம் திகதிய 2283/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண                    
(ii)    கௌரவ லொஹான் ரத்வத்தே                    
(iii)    கௌரவ அநுராத ஜயரத்ன            -     இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ மதுர விதானகே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட அவர்களுக்கு “சவீர மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


அனுதாபப் பிரேரணைகள்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற கௌரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டதுடன் ஜூன் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடரப்படவுள்ளது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூன் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks