E   |   සි   |  

2022 மே 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல் 2022 மே 17 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு மின்சக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு  மற்றும் வலுசக்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு எனப்படும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்  “மின்சக்தி மற்றும் வலுசக்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” என மீளப்  பெயரிடப்படுமாக


ஒத்திவைப்புப் பிரேரணை

“சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மே 19ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks