E   |   සි   |  

2022 ஏப்ரல் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “சமாதானம், கல்வி வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தியிற்கான விளையாட்டு நிறுவகம் (SPEED) (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ வருண லியனகே

2021.10.06 அன்று ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளின் கீழ் தான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்படாமை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ குணதிலக ராஜபக்ஷ
(ii)    கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன


அதனையடுத்து, 1645 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஏப்ரல் 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks