E   |   සි   |  

2022 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிடெட்டின் ஆண்டறிக்கை

(iii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 5, 19 மற்றும் 20 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஆகஸ்ட் 14 ஆம் திகதிய 2240/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜயந்த சமரவீர                    
(ii)    கௌரவ நாலக பண்டார கோட்டேகொட                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ (திருமதி) தலதா அதுகோரள
(ii)    கௌரவ அகில எல்லாவல


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஓய்வூதியர்களுக்கான பணிக்கொடை வழங்குவதில் தாமதம்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1716 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 24ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks