பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2022 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு
(ii)    2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அரசிறை முகாமைத்துவ அறிக்கை - 2022


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) - இரண்டாம் மதிப்பீடு

நிதி அமைச்சர், கௌரவ பெசில் ரோஹண ராஜபக்ஷ அவர்கள் இன்று பி.ப. 2.00 மணியளவில் (2022ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2022 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், 2021 நவம்பர் 17 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.


இதனையடுத்து, 1637 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 13ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks