E   |   සි   |  

சபை அலுவல்கள்


"சமாஜ சகான பதனம (கூட்டினைத்தல்)" சட்ட மூலத்தை அறிமுகம் செய்வதற்கு கெளரவ.(வண)உடவத்தே நந்த தேரருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சரால் கொண்டுவரப்பட்ட, பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை,_ 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40 ஆம் அத்தியாயமான) பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் !! ஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2008 ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப் படுத்திக்கொண்டு செய்யப்பட்ட பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்படி அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்தில் 72 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு மேலுமொரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டது. பிரேரணைக்குச் சார்பாக 84 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அதன் பின்னர் 2008 ஓகஸ்ட் 7, வியாழக்கிழமை 09.30 மணிவரை பாராளுமன்றம் 16.29 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks