E   |   සි   |  

2019 மார்ச் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(ii)    (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2013
(ii)    இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2015


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks