E   |   සි   |  

2019 மார்ச் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  முழுப் பாராளுமன்ற குழு சம்பந்தமான நடைமுறை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

நிரல்களின் திருத்தங்களுக்கான உத்தேச திருத்தங்களின் பட்டியல் வரைவு மதிப்பீடு – 2019


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி மற்றும் மனிதவள பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                   
(ii)    கௌரவ சிசிர குமார அபேசேகர

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நீர்ப்பாசன தாங்கிகளில் நீர்வாழ் தாவரங்களின் ஊடுருவல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 14ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks