E   |   සි   |  

2016 மே 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ வஜிர அபேவர்தன - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன                   
(iii) கௌரவ பாலித ரங்கே பண்டார

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

யாழ்ப்பாணத்தில் சமூக சீரழிவு தொடர்பான சம்பவங்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) 2016 மே மாதம் 05 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறைநிரப்புத் தொகை – தலைப்பு 240 – நிகழ்ச்சித்திட்டம் 2 தொடர்பிலான தீர்மானம்
(ii) ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்படிக்கை (ஏற்புறுதி) சட்டமூலம்
(iii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(v) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள்


அதனையடுத்து, 1215 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks