01

E   |   සි   |  

 திகதி: 2018-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0382/2018: Reopening of Medical Center at the Westlake estate, Pasbage

382/ '18

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி மாவட்டத்தின், பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவின் வெஸ்ட்ஹோல் தோட்டத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையம் அரசிற்கு பொறுப்பேற்கப்பட்டு கிராமிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டதென்பதையும்;

(ii) மேற்படி கிராமிய வைத்தியசாலையின் மூலம் இப்பிரதேசத்தின் 3500 - 4000 குடும்பங்களுக்கு சேவை வழங்கப்பட்டதென்பதையும்;

(iii) தற்போது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக இவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், இவ்வைத்தியசாலையை மீண்டும் திறந்து பெருந்தோட்ட மக்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks