01

E   |   සි   |  

 திகதி: 2017-07-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

1603/2017: Underground Power Supply Line to Colombo - Inactive

 

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு நகருக்கு மின்சாரத்தை வழங்கும் நிலக்கீழ் மின்சார வழங்கல் முறையொன்று சுமார் 03 வருட காலமாக செயலிழந்துள்ளமை பற்றி அறிவாரா;

(ii) மேற்படி மின்சார வழங்கல் முறையின் மின்சார வழங்கல் கொள்ளளவு யாது;

(iii) குறிப்பிட்ட வழங்கல் முறையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தல் தாமதம் அடைவதற்கான காரணம் யாது;

(iv) மேற்படி வழங்கல் முறையின் திருத்தியமைத்தல் தாமதமடைதல் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர்கள் யார்;

(v) மேற்படி ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் எதிராக அமைச்சு அல்லது இலங்கை மின்சார சபையினால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்காற்று நடவடிக்கை வெவ்வேறாக யாது;

(vi) கொழும்பு நகரில் தொடர்ச்சியான மின்சார வழங்கலை உறுதிப்படுத்தும் முகமாக மின் அனுப்பல் முறைமையினை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-27

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks