பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-08-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0373/2010: Muslim Religeous Institutions

0373/ ‘10

கெளரவ நூர்டீன் மசூர்,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)      1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியளவில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நிருவாக மாவட்டங்களில் முஸ்லிம் மத, கலாசார அலுவல்கள் திணைக்களத்திலும் வக்பு பிரிவிலும் பதிவு செய்யப்பட்டிருந்த -

(i) முஸ்லிம் பள்ளிவசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், சாவியாக்கள், தர்காக்கள் ஆகிய முஸ்லிம் மத புனித தலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

(ii) அவற்றின் பெயர்கள், முகவரிகள், பதிவிலக்கங்கள் யாவை என்பதையும்,

(iii) அந்த முஸ்லிம் பள்ளிவாசல்கள், புனித தலங்களின் சட்டபூர்வ நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக இலங்கை வக்பு சபையினால் அல்லது முஸ்லிம் மத, கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரினால் அப்போது நியமிக்கப்பட்டிருந்த நபர்களின் பெயர்கள், முகவரிகள் யாவை என்பதையும்,

(iv) அந்த ஒவ்வொரு முஸ்லிம பள்ளிவாசல்கள், புனித தலங்களுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் (1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவசல்கள், புனித தலங்கள் அல்லது வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள) அசையா சொத்துக்கள், காணிகள் யாவை என்பதையும்,

(v) மேற்கூறிய ஒவ்வொரு வக்பு சொத்துக்கள் உள்ள இடங்களில் வரிப்பண இலக்கங்கள், முகவரிகள் யாவை என்பதையும்

மாவட்ட மட்டத்தில் அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-18

கேட்டவர்

கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks