பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1352/2025
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும், சட்டவிரோத மீன்பிடிப் படகுகளையும் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிவாரா;
(ii) ஆமெனில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iii) அதற்கான கண்காணிப்பு மற்றும் அமுலாக்கல் நடவடிக்கைகளை வலுவூட்ட எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டம் யாது;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) மேற்படி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் —
(i) காரணமாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீன்பிடி உற்பத்தியின் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தாக்கம் யாது;
(ii) இதன் காரணமாக மேற்படி மாவட்டங்களில் மீனவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(iii) மேற்படி விடயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வருமானத்தையும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iv) இவ்விடயத்தைக் கட்டுப்படுத்துவதற்கு போதியளவில் சட்டம் அமுல்படுத்தப் படாமைக்கான காரணங்கள் யாவை;
(v) இதனைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, இலங்கைக் கடற்படை மற்றும் இலங்கை பொலிசாருக்கிடையில் சிறந்ததொரு ஒருங்கிணைப்பு பேணிவரப்படுகின்றதா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-13
கேட்டவர்
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks