01

E   |   සි   |  

 திகதி: 2023-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1673/2023: போர்ச் சூழல் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள்: நாட்டுக்கு அழைத்து வருதல்

1673/2023

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ​​(i) இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியே பிற இடங்களிலும் தங்கியுள்ளார்கள் என்பதையும்;

(ii) தற்போது போர் நிறைவடைந்துள்ள போதிலும், மேற்படி குழுவைச் சேர்ந்த சுமார் 100,000 பேருக்கு இலங்கைக்கு மீண்டும் வருகைதர இயலாதுள்ளதென்பதையும்;

(iii) அம்மக்களில் முகாம்களுக்கு வெளியே பிற இடங்களில் தங்கியுள்ள பலர், இந்திய அரசாங்கத்தால் வீசா வழங்கப்படாததால் இலங்கைக்குத் திரும்பும் போது, இவர்கள் இந்தியாவில் தங்கியிருந்த முழுக் காலத்திற்குமான வீசா கட்டணத்தைச் செலுத்த நேரிட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்த வினாவுக்கான விடை பின்வருமாறு:

 

(அ)    (i)   தமிழ்நாட்டில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களில் இரு பிரிவினர் உள்ளனர்:

1.   தமிழ்நாட்டில் புனர்வாழ்வு அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்

புனர்வாழ்வுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரவுகளின்படி,

  • இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 106 அகதி முகாம்கள் இயங்கி வருகின்றன. அம்முகாம் களில் 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 பேர் வசிக்கின்றனர்.
  • பொதுவாகப் படகுமூலம் வரும் புலம்பெயர் தமிழர்கள் அகதி முகாம்களில் பதிவுசெய்யப் படுவா்.
  • 2012ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை, விமானம் மூலம் வரும் இலங்கைப் புலம் பெயர்ந்தோரும் அகதிமுகாம்களில் பதிவு செய்யப்பட்டனர். 2012ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்துக்குப் பின்னர், விமானம்மூலம் வரும் இலங்கையர்கள் அகதி முகாம்களில் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் அவர்கள் குடும்பத்துடன், மேற்குறித்த பதிவில்லாமல் முகாமுக்குள் அல்லது அதற்கு வெளியில் வசிக்க முடியும்.

2. அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்:

  • கிட்டத்தட்ட 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 34,000 பேர் தமது விபரங்களைத் தாம் வசிக்கும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்து, தமிழ்நாட்டி லுள்ள அகதி முகாம்களுக்கு வெளியே வசிக்கிறார்கள்.
  • இந்த இலங்கையர்களில் ஒரு பிரிவினருக்குச் சுய விருப்பின் பேரில் அகதி முகாம்களுக்கு வெளியில் வசிப்பதற்குப் புனர்வாழ்வுத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.
  • படகுமூலம் அல்லது விமானம்மூலம் வரும் இலங்கையர்களுக்குத் தமது விருப்பத்திற் கேற்ப அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்க முடியும்.

 

பதில் தேதி

2023-05-09

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks