01

E   |   සි   |  

 திகதி: 2021-02-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0549/2021: Payments to employees in Timber corporation in Ginthota

549/2020

கெளரவ சந்திம வீரக்கொடி,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி, கிங்தோட்டையில் அமைந்துள்ள கிங்தோட்டை ப்ளைவூட் தொழிற்சாலையில் (முன்னர் - கிங்தோட்டை ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை) சேவையாற்றுகின்ற ஊழியர்களுக்குரிய ஊதியங்கள், கொடுப்பனவுகள், பணிக்கொடைக் கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீட்டுத் தொகை செலுத்துகைகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை என்பதையும்;

(ii) இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) நீதிமன்றத்தின் மூலம் ஏற்புடைய பணிப்பாளர்களுக்கு எதிராக பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பிடியாணையின் பிரகாரம் ஏற்புடைய பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படாதமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி ஊழியருக்குரிய ஊதியங்கள், கொடுப்பனவுகள், பணிக்கொடைக் கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) இன்றேல், ஏற்புடைய அலுவலர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks