01

E   |   සි   |  

 திகதி: 2011-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0893/2011: Study Leave for Students of Advance Level

0893/ ’10

 கெளரவ ஹரின் பெர்னாந்து,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிரதான பாடசாலைகளின் மாணவர்களுக்கு கற்கை லீவு (study leave) வழங்கப்படுகின்றது என்பதையும்,

           (ii)    க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தவணை முடிவடையும் போது பாடவிதானத்திற்கு ஏற்ப பாடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய போதிலும் குறிப்பிட்ட பாடங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களினால் பாடசாலை நேரங்களில் மேலதிக வகுப்புக்கள் (Tuition Class) நடத்தப்படுகின்றன என்பதையும்,

(iii) அந்த வகுப்புக்களை நடத்துவதற்காக மேற்கூறியவாறு கற்கை லீவு வழங்கப்பட்டுள்ளது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) மேற்கூறியவாறு லீவு வழங்குவதற்கு யாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவிப்பாரா?

(இ) கற்கை லீவு வழங்கப்பட்டு பாடசாலை நேரங்களில் வகுப்புக்களை நடத்தாமல் அந்தக் கால எல்லைக்குள் பணத்துக்காக வகுப்புக்களை நடத்தும் அரச பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-24

கேட்டவர்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks