01

E   |   සි   |  

 திகதி: 2014-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

4307/2014: டெங்கு நோயாளர்கள் : விபரம்

4307/ ’13

கௌரவ இரான் விக்கிரமரத்ன,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கையில் 2012ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் அறிக்கையிடப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையையும்;

           (ii)    2011ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் இதன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும்

ஆண்டு ரீதியாக அவர் கூறுவாரா?

(ஆ) 2009 ஜனவரி முதல் இற்றைவரையில் ஆண்டு ரீதியாக,

(i) கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பிரதேசங்களின் எண்ணிக்கையையும்;

(ii) டெங்கு நுளம்பு பெருகும் பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைத் தனித்தனியாகவும்

அவர் கூறுவாரா?

(இ) 2010 ஜனவரி முதல் இற்றைவரையில் ஆண்டு ரீதியாக,

(i) அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அறிக்கையிடப்பட்ட இலங்கையின் மூன்று மாவட்டங்களையும்;

(ii) இம்மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பிரதேசங்களின் எண்ணிக்கையையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஈ) (i) நாட்டில் டெங்குத் தொற்று தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள 2009ஆம் ஆண்டு முதல் இற்றைவரை சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களையும்;

(ii) அக்குழுக்கள் ஒவ்வொன்றினதும் நியமனத் திகதிகளையும்;

(iii) அக்குழுக்கள் ஒவ்வொன்றினதும் ஆணைகளையும்

அவர் கூறுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-24

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-05

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks