பாராளுமன்ற முறைமை தொடர்பில் பேருவளை நளீமியா கலாபீட மாணவர்களுக்கு அறிவுறுத்தல் |
திகதி : | 2024-01-12 |
பேருவளை நளீமியா கலாபீடத்தில் கல்விபயிலும் மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் (ஜன. 10) கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நளீமியா கலாபீடத்தின் அடிப்படைக் கற்கைகள் மத்திய நிலையம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டதுடன், இதன் மூலம் பாராளுமன்ற முறைமை, சட்டவாக்க முறைமை மற்றும் பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொது வெளிக்கள சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில், உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.யு.எம். வாசிக், பொது வெளிக்கள சேவை அதிகாரி யஸ்ரி மொஹமட் மற்றும் ஊடக அதிகாரி நுஸ்கி முக்தார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை பாராளுமன்றத்தினால் நளீமியா கலாபீட நூலகத்துக்கு புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










