இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு

திகதி : 2023-07-07

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “ஆயுள்வேதம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு  மனுவின் பிரதி  தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜூலை 07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அத்துடன், நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து கௌரவ துஷார இந்துனில் அமரசேன அவர்கள் இராஜினாமா செய்தமையின் காரணமாக அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஜயந்த சமரவீர அவர்கள் பாராளுமன்ற 106 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom