இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு நியமனம்

திகதி : 2023-07-01

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக கௌரவ டிரான் அலஸ் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜூலை 01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, கௌரவ புத்திக பத்திறண, கௌரவ (வைத்திய கலாநிதி) கயாஷான் நவனந்த, கௌரவ துஷார இந்துனில் அமரசேன, கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ தவராஜா கலை அரசன் மற்றும் கௌரவ மஞ்சுலா திசாநாயக ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom