இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகர் மற்றும் துருக்கி ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

திகதி : 2023-06-05

துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அதிமேதகு ரஜப் தையிப் அர்துகான் (Recep Tayyip Erdoğan) பதவியைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் அந்நாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்கமைய கௌரவ சபாநாயகர் நேற்று (ஜூன் 04) கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையில் பல வருடங்களாகக் காணப்படும் இராஜதந்திர உறவுகளை மேலும்  வலுப்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்ததுடன், அண்மையில் உலகையே உலுக்கிய துருக்கிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன்வந்த இலங்கை அரசாங்கத்துக்கும், முப்படையினரைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கும், வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் துருக்கி மக்கள் சார்பாக அந்நாட்டின் விசேட நன்றிகளை ஜனாதிபதி அர்துகான் சபாநாயகருக்குத் தெரிவித்தார்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom