இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு (03) நியமிக்க ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

திகதி : 2023-04-04

பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு  கௌரவ ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியது. இந்த நியமனம் 2023 மார்ச் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.

அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஏப்ரல் 01ஆம் திகதி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சாகர காரியவசம் மற்றும் கௌரவ கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom