மதிப்பாய்வின் மூலம் சிறந்த கொள்கை உருவாக்கம்: இலங்கை மற்றும் ஆசிய பசிபிக் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அமர்வு, மற்றும் உரையாடல் பரிமாற்றம் |
திகதி : | 2023-03-28 |
மார்ச் 30, 2023 அன்று, இலங்கைப் பாராளுமன்றம் ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த ஐம்பது (50) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்கள் அடங்கிய குழுவொன்று விஜயம் செய்யவுள்ளனர். இந்த விஜயத்தின் நோக்கம், மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பரிமாற்ற அமர்வு மற்றும் உரையாடலை எளிதாக்குவதாகும். இந்த நிகழ்வு, 2023 மார்ச் 27 முதல் மார்ச் 30, 2023 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறும். 'மதிப்பாய்வு மூலம் சிறந்தகொள்கை உருவாக்கம்' என்ற தலைப்பில் 4 நாள் பயிற்சி செயலமர்வு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு உத்தியோகத்தர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் மதிப்பாய்வு குறித்த நேரடிப் பயிற்சி நெறியாகும்.
பரிமாற்ற அமர்வின் நோக்கம், மதிப்பாய்வுகளை நிறுவனமயமாக்குதல் மற்றும் வலுவான தேசிய மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை நாடாளுமன்றத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதாகும். தெற்காசியாவில் தேசிய மதிப்பாய்வுக் கொள்கையை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு உட்பட, இலங்கை இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இது தவிர, பாராளுமன்றம் அதன் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறுவியுள்ளது, இது பாராளுமன்றத் தெரிவுக்குழு (PSC) நியமனம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது எந்தவொரு பாராளுமன்றத்திற்கும் முதல் முறையாகும். தேசிய மதிப்பீட்டு சட்ட வரைபை பாராளுமன்றத் தெரிவுக்குழு தயாரித்துள்ளது, இது தற்போது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டதும், இந்தச் சட்டமூலம் இலங்கையில் உள்ள பொது நிறுவனங்களுக்கு நிலையான பெறுபேறுகளை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் வழங்குவதற்கு உதவும், இது நாட்டின் பொருளாதார வலுவூட்டலுக்கு பங்களிப்பதுடன் எவரையும் பின்தங்க அனுமதிக்காது.
சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு மார்ச் 30 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், இலங்கை பிரதமர் கௌரவ. தினேஷ் குணவர்தன, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ. மகிந்த யாப்பா அபேவர்தன, அவைத்தலைவர் கௌரவ. சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர்,கௌரவ. சஜித் பிரேமதாச, GPFE இன் தலைவர் கௌரவ.கபீர் ஹாஷிம், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தசநாயக்க மற்றும் ஆசிய பசிபிக் மதிப்பீட்டு சங்கம் (APEA) மற்றும் இலங்கை மதிப்பீட்டு சங்கம்(SLEvA) ஆகியவற்றின் தலைவர் கலாநிதி அசேல கலுகம்பிட்டிய ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இணைந்து கொள்கின்றனர்.
மேலும், இந்த அமர்வில் இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிக்கிரி ஜயதிலக்க, களனிப் பல்கலைக்கழக துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, சார்லண்ட் பல்கலைக்கழகம்/ஜெர்மனி மதிப்பீட்டு மையத்தின் நிறுவுனர் மற்றும் இயக்குனர், பேராசிரியர். ரெய்ன்ஹார்ட் ஸ்டாக்மேன், மற்றும் UNFPA மதிப்பீட்டு அலுவலகத்தின் இயக்குநர் திரு. மார்கோ செகோனி ஆகியோரின் உரைகளும் இடம்பெற உள்ளது.
"மதிப்பாய்வு மூலம் சிறந்த கொள்கை உருவாக்குதல்" பயிற்சித் நெறியானது சர்வதேச அபிவிருத்தி மதிப்பாய்வு பயிற்சித் திட்டத்திற்கும் (IPDET), மற்றும் ஆசிய பசிபிக் மதிப்பாய்வுச் சங்கம் (APEA), உலகளாவிய பாராளுமன்ற மதிப்பாய்வுகளுக்கான மன்றம் (GPFE) இடையிலான கூட்டு முயற்சியாகும். பசிபிக் பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பாய்விற்கான மன்றம் (APPFE). இந்த பயிற்சியானது உலகளாவிய மதிப்பீட்டு முன்முயற்சியால் (GEI) ஆதரிக்கப்படுகிறது, மேலும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய(UNFPA) மதிப்பாய்வு அலுவலகம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய (UNFPA) பசிபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் அலுவலகங்கள், ஆசிய சனத்தொகை அபிவிருத்தி சங்கம் (APDA), ஐ. நா. பெண்கள், மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெறுகிறது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






