ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் |
திகதி : | 2022-11-30 |
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (நவ. 30) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு சபாநாயர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப் படுத்தினார்.
2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தச் சட்டமூலம் பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தனவினால் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தி திருத்தப்படுவதுடன், இதன்மூலம் கடன்பெறுவதற்கான எல்லை 3,844 பில்லியன் ரூபாவிலிருந்து 4,507 பில்லியன் ரூபாவாகத் திருத்தப்படுகிறது.
இதற்கமைய, இந்தச் சட்டமூலம் 2022ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமாக இன்று முதல் (30) நடைமுறைக்கு வருகிறது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








