2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் |
திகதி : | 2022-11-22 |
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் இன்று (நவ. 22) நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் நடுநிலை வகித்திருந்தார்.
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஆரம்ப உரையை (வரவுசெலவுத்திட்ட உரை) ஜனாதிபதியும், நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுவரை ஞாயிற்றுக்கிழமை தவிர 07 நாட்கள் இடம்பெற்றது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான குழு நிலை விவாதம் நாளை (23) ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும். குழு நிலை விவாதம் தினமும் மு.ப 9.30 முதல் பி.ப 7.00 வரை நடைபெறவிருப்பதுடன், மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 08ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






