இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

திகதி : 2022-11-21

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூஜின் ஜியோங் (Woonjin Jeong) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (நவ. 17) சந்தித்தார்.

கொரிய சீமோல் அமைப்பின் தலைவர் லீ ஸோங் ஜொங் மற்றும் சீமோல் அமைப்பின் இலங்கைப் பணிப்பாளர் சோய் சுங் வூ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சீமோல் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்திகளை விருத்தி செய்தல், கிராமிய மக்களை வலுப்படுத்தல் போன்ற சமூக அடிப்படையிலான திட்டங்கள் தொடர்பில் சீமோல் அமைப்பின் தலைவர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

அதற்கமைய, விவசாயம் உள்ளிட்ட ஏனைய துறைகளிலான அபிவிருத்திகள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை விருத்தி செய்துகொள்ளக்கூடிய முறை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் அவர்களும் கலந்துகொண்டார்.

 

1 4

6

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom