பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர் |
திகதி : | 2022-11-16 |
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (நவ. 16) சபையில் அறிவித்தார்.
இந்த பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே பணியாற்றவுள்ளார். அத்துடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கௌரவ நஸீர் அஹமட், கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ வருண லியனகே, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






