இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்துக்கு கௌரவ சரத் வீரசேகர எதிராக வாக்களித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு

திகதி : 2022-10-22

பாராளுமன்றத்தில் நேற்று (ஒக். 21) விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர எதிராக வாக்களித்திருந்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இங்கு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவடைந்ததை அடுத்து  நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர   வாக்களித்திருந்தார்.

அதனையடுத்து, மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், இதன் போதும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர சட்டமூலத்துக்கு எதிராக   வாக்களித்திருந்தார் என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom