இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சிறுவர்களின் நலன்கருதி எதிர்வரும் காலங்களில் பாரிய திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் - சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி கௌரவ ரோஹிணி கவிரத்ன

திகதி : 2022-10-01

இந்நாட்டின் பிள்ளைகளின் நலன் கருதி எதிர்வரும் காலங்களில் பாரிய செயல் திட்டங்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக சிறுவர்களுக்கான பாராளுமன்ற குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

விசேடமாக இந்த நாட்டின் சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் போசாக்கு, பாதுகாப்பு, கல்வி, உரிமைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை கையாளுகின்ற நிறுவனங்களின்  தொழிற்திறன் தொடர்பில் உரிய அவதானத்தை செலுத்துவதற்கும் தமது ஒன்றியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் தொடர்பில் நேரடியாக  தொடர்புபடும் அமைச்சுக்களான மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு போன்ற அமைச்சுகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்களுடன் எதிர்வருகின்ற காலங்களில் வினைத்திறனாக செயற்பட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியிலேயே  கவிரத்ன அவர் இது தொடர்பில் தெரிவித்தார்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom