யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தினால் விசேட நிச்சித்திட்டம் |
திகதி : | 2022-09-02 |
|
பாராளுமன்ற முறைமைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்காக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அண்மையில் ஒன்லைன் முறையின் கீழ் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக திணைக்களத்தின் பணிப்பாளர் செல்வி ஜி. தட்சனாராணி அவர்கள் பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயன்முறைகள் தொடர்பில் விரிவுரையை வழங்கியதுடன் ஜனநாயகமும் பாராளுமன்றமும் என்ற தலைப்பில் திரு ஸியாத் அஹமட் விளங்கங்களை வழங்கினார். இந்தச் செயலமர்வை பாராளுமன்ற பொது சேவை அதிகாரி யஸ்ரி மொஹம்மத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.